Home இலங்கை அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவா? “எமக்கிடையே அதிகாப் போட்டி இல்லை”

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவா? “எமக்கிடையே அதிகாப் போட்டி இல்லை”

by admin

 

 

 

 


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை கருத்தில் எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் , ஜனாதிபதியாவதற்கு கோத்தபாய ராஜபக்ச எவ்வளவு ஆதரவு தேவை என்பது த னக்கு தெரியும் என குறிப்பிட்ட அவர், தனக்கும் தனது சகோதரரிற்கும் இடையில் எந்தவித கருத்துமுரண்பாடுகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தங்கள் இருவர் மத்தியில் அதிகாரப்போட்டியெதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், முன்னர் குடும்ப ஆட்சி குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களே தற்போது இந்த கருத்தை பரப்புவதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் பொது எதிரணியில் வெறுமனே ராஜபக்சாக்கள் மாத்திரம் இல்லை அரசாங்கத்தில் இல்லாத சிறந்த அரசியல்வாதிகள் எம்முடன் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More