Home இலங்கை இணைப்பு 2 – மயிலிட்டிகடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலின் இயந்திர பகுதிக்கு தீ பரவி உள்ளமையால் கட்டுப்படுத்தமுடியாத நிலை :

இணைப்பு 2 – மயிலிட்டிகடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலின் இயந்திர பகுதிக்கு தீ பரவி உள்ளமையால் கட்டுப்படுத்தமுடியாத நிலை :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மயிலிட்டியில் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் கப்பலின் இயந்திர பகுதிக்கு தீ பரவி உள்ளமையால் தீயினை கட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருத்த வேலைகளுக்காக கடந்த ஒரு வருடகாலமாக குறித்த கப்பல் மயிலிட்டி கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டு இருந்தது. அந்நிலையில் நேற்றிரவு திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. அதனை தொடர்ந்து கடற்படையினர் தீயினை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கப்பலின் பெரும் பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் இன்று மதியம் கப்பலின் இயந்திர பகுதிக்கு தீ பரவி உள்ளது. இயந்திர பகுதியில் பெருமளவான டீசல் மற்றும் எரிவாயு உள்ளமையால் தீயினை கட்டுப்படுத்த கடற்படையினர் பெரும் சவாலை எதிர் கொண்டுள்ளனர்.

படங்கள் செல்வநாயகம் நிரூஜன்

மயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ :

Jun 18, 2018 @ 06:48
யாழ்.மயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல் தீ பிடித்துள்ளது. குறித்த கப்பல் பழுதடைந்த நிலையில் மயிலிட்டி கடலில் நங்கூரமிடப்பட்டு இருந்த கப்பல் நேற்றிரவு தீ பிடித்துள்ளது. அந்நிலையில் இன்று அதிகாலை முதல் கடற்படையினர் தீயினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More