Home இலங்கை கொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்

கொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


‘கொக்குவில் மேற்கு காந்தி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளானவர்கள்’ என அவர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மன்றுரைத்தை முறைப்பாட்டாளர் மன்றில் முன்னிலையாகி மறுத்தார்.

‘ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வந்தனர். அதில் முதலாவது சந்தேகநபராக கூண்டில் நிற்பவர் என்னை வெட்டினார். ஏனைய இருவரும் சம்பவ இடத்தில் நின்றனர். மூவரும் தப்பி ஓடவே ஒருவரை மக்கள் துரத்திப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்’ என்று முறைப்பாட்டாளரான இளைஞன் மன்றில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு காந்தி சனசமுக நிலையத்துக்கு அண்மையில் கடந்த 10ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றது. ‘மோட்டார் சைக்கிளிலில் வாள்களுடன் வந்த கும்பல், அந்தப் பகுதி இளைஞன் ஒருவரை தாக்கியது. இளைஞன் காயமடைந்தார்.

சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பித்த கும்பலை, அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி துரத்தித்தினர். கும்பலில் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது. மடக்கிப்பிடிக்க ப்பட்டவர் காவல்துஐறயினரிடம் கையளிக்கப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் பிடிபட்டனர்’ என்று காவல்துஐறயினர் சம்பவ தினத்தன்று தெரிவித்திருந்தனர்.

எனினும் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை மட்டும் கடந்த 11ஆம் திகதி காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். இதன்போது சந்தேநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி, ‘சந்தேகநபர்கள் இருவருமே தாக்குதலுக்குள்ளானவர்கள். தாக்கியவரே முறைப்பாடு வழங்கியுள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர் தாக்குதலுக்குள்ளானவர்களை கைது செய்துள்ளனர்’ என்று மன்றுரைத்திருந்தார்.

அதனால் முறைப்பாட்டாளரை 18ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதிவான் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் சந்தேகநபர்கள் இருவரையும் நேற்று 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்று (18) திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

மூன்றாவது சந்தேகநபர் என மற்றொரு இளைஞரை காவல்துறையினர் மன்றில் நேற்று முற்படுத்தினர். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் எனவும் அங்கிருந்து வீடு திரும்பியவேளை கைது செய்யப்பட்டார் எனவும் காவல்துறையினர் மன்றுரைத்தனர்.

முறைப்பாட்டாளர் மன்றில் முன்னிலையானார்.

‘ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வந்தனர். அதில் முதலாவது சந்தேகநபராக கூண்டில் நிற்பவர் என்னை வெட்டினார். ஏனைய இருவரும் சம்பவ இடத்தில் நின்றனர். மூவரும் தப்பி ஓடவே ஒருவரை மக்கள் துரத்திப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்’ என்று முறைப்பாட்டாளரான இளைஞன் மன்றில் தெரிவித்தார்.

முறைப்பாட்டாளரின் தலையில் காயம் காரணமாக மருந்து கட்டப்பட்டிருந்தது.

‘முறைப்பாட்டாளருக்கு தலையில் வெட்டு விழவில்லை. அவருக்கு தலையில் கதவு அடித்தே காயம் ஏற்பட்டது’ என்று சந்தேகநபர்களின் சட்டத்தரணி மன்றுரைத்தார்.

சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியலை வரும் 2ஆம் திகதிவரை நீடித்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More