Home இலங்கை சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் கோவை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் கோவை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்ட்டது.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க இன்று மன்றில் முன்னிலையாகினார். அவர் சார்பில் சட்டத்தரணி மன்றில் தோன்றினார்.

அரச சட்டவாதி இவ்வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று வழக்கின் கோவை தற்போது சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்இதையடுத்து இவ்வழக்கை வரும் அக்டோபர் மாதம் பத்தாம் திகதிவரை வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More