Home உலகம் ஈராக் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை கைகளால் எண்ணுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஈராக் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை கைகளால் எண்ணுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

by admin

ஈராக் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை கைகளால் எண்ணுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈராக்கில் கடந்த மே 12ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல நடைபெற்ற நிலையில் அங்கு முதல் முறையாக மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.  புதிய நடைமுறையின் மூலம் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கடந்த மே 14-ம் திகதி முடிவுகள் வெளியிடப்பட்டன.

மொத்தமுள்ள 329 தொகுதிகளில் ஷியா மதகுரு முக்ததா அல் சதர் தலைமையிலான கூட்டணி 54 இடங்களைக் கைப்பற்றியது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹைதி அல்-ஆமிரி தலைமையிலான கூட்டணி 47 இடங்களையும் தற்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாதி நாசர் தலைமையிலான கூட்டணி 42 இடங்களையும் பெற்றது. ஆட்சியமைக்க 165 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தேர்தலின்போது மோசடி கள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பாக ஸ்கானர் இயந்திரத்தில் மோசடி நடைபெற்றுள்ளது எனவும் குற்றம் சுமத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அனைத்து வாக்குச்சீட்டுகளையும் மீண்டும் கைகளால் எண்ண வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் தொடர்பாக அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளையும் கைகளால் எண்ண உத்தரவிட்டது. அதன்படி சுமார் 1.1 கோடி வாக்குகள் கைகளால் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More