Home இலங்கை இரத்மலானை சக்கிந்தராமவில் இராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு…

இரத்மலானை சக்கிந்தராமவில் இராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு…

by admin


இரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள இராணுவ வீரரின் வீட்டுக்கு அருகில் இன்று காலை 7.30 மணியளவில் மேற்படி தூப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.  முச்சக்கரவண்டியில் சென்ற இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதென காவற்துறையினர் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த இராணுவ அதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொட்டாஞ்சேனை- ஜம்பட்டா வீதி, 137ஆம் தோட்ட பகுதியில் நேற்றிரவு 9.15 மணியளவில் இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே இந்தத் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் காவற்துறை  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More