Home இலங்கை ஒட்டுசுட்டான் சம்பவம் புலிகளின் மீள் வருகையா?

ஒட்டுசுட்டான் சம்பவம் புலிகளின் மீள் வருகையா?

by admin

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியவரும்  கைது – கைதுகள் தொடரும் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கடந்த 22 ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேலும் கைதுகள் தொடரும் எனவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று ஞாயிற்று கிழமை (24.06.18) கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய கேதீஸ்வரன் எனும் இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை வந்தநிலையில் நோயாளர் விடுதியிலிருந்து வெளியேறிய போது வைத்தியசாலை வளாகத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இதுவரை ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கேதீஸ்வரன் என்பவர் விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டவர் எனவும், நெடுங்கேணி காட்டுப் பகுதிக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பன் தேவிகனுடன் தொடர்புபட்டு ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் எனவும் காவற்துறைத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், மேலும் கைதுகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் காவற்துறைத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இருபது கிலோ கிளைமோர் குண்டு, கைக்குண்டு ஒன்று, றிமோட் கொன்ரோல் நான்கு, ரி56 துப்பாகி தோட்டாக்கள்- 98, விடுதலைப்புலிகளின் சீருடை – 2, சுமார் 45 வரையான விடுதலைப்புலிகளின் புலிக்கொடி என்பவை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://old.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105505/categoryId/2/language/ta-IN/—–.aspx

புலிகளின் புதிய தலைவர்களின் சடலங்கள் பதவியாவுக்கு மரண விசாரணையும் அனுராதபுரம் நீதிவானிடம்:-

Bookmark and Share

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- அரச நாடகத்தின் இறுதிப்பாகம்:-

புலிகளின் புதிய தலைவர்களின் சடலங்கள் பதவியாவுக்கு மரண விசாரணையும் அனுராதபுரம் நீதிவானிடம்:-

 

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வெடிவைத்தகல் கிராமத்தில் இடம் பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டவர்களின் சடலங்கள் பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவெளை இச் சடலங்களின் மரணவிசாரணை நடத்தும் அதிகாரமும்  அனுராதபுரம் நீதிவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும தெரியவருகின்றது.


வவுனியா நெடுங்கேணி சேமமடு வீதியில் உள்ள வெடிவைத்தகல் பிரதேசத்தில்  மக்கள் குடிமனையற்ற காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.


இராணுவத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தை நேற்று மாலை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது இராணுவத்தால் தேடப்பட்டு வந்த கோபி உள்ளிட்ட மூவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் அதனையடுத்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அவர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அப் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.


இதேவேளை கோபி என்றொரு பாத்திரம் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு புலிகளின் புதிய தலைவர் என பட்டம் சூட்டப்பட்டு, பின்னர் அவருடன் இணைத் தலைவர்களாக சேர்க்கப்பட்ட தேவிகன் மற்றும் அப்பன் என்ற பாத்திரங்களும் அரசாங்கத்தினதும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினதும் திட்டமிட்ட நாடகம் என குளோபல் தமிழ்ச் செய்திகள் தொடர்ச்சியாக கூறிவந்தது. அந்தக் கூற்று இன்று இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும் நடந்து கொண்ட விடயத்தின் மூலம் உறுதியாகி இருப்பதனை வாசகர்கள் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக சுட்டுக்கொல்லப்பட்ட இவர்களின் சடலங்களை பதவியா வைத்தியசாலைக்கு அனுப்பியதும், அனுராதபுரம் நீதவானிடம் மரண விசாணை ஒப்படைக்கப்பட்டதும் பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More