Home இலங்கை நுண்கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட பெண்

நுண்கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட பெண்

by admin

அம்பாறை அக்கரைப்பற்று கிராமத்தில் ஒரு பெண் நுண்கடன் தொல்லையால் தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தற்கொலை செய்துள்ள 21 வயதான அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் உயிரை நுண்கடன் நிதி நிறுவனங்கள் பலியாக்கி வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஐந்து மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் 53 தற்கொலை மரண சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதில் 2016ம் ஆண்டு 97 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளதுடன், 2017ம் ஆண்டு கடந்த வருடம் 116 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த இரண்டு வருடங்களையும் விட இந்த ஆண்டு ஐந்து மாதத்திலேயே 53 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More