Home பிரதான செய்திகள் அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு இருபது போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது

அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு இருபது போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது

by admin


அயர்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி, அயர்லாந்து அணியை 143 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது அயர்லாந்து அணியுடன் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் விளையாடிய நிலையில் முதலாவது போட்டியில் இந்திய அணி ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது இருபதுக்குனு இருபது போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி களத்ததடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 12.3 ஓவர்களில் 70 ஓட்டங்கள் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

இதன்மூலம் இந்திய அணி 143 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகனாகவும், சஹால் தொடர்நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More