Home இலங்கை முல்லைத்தீவில் 15 கிலோ கிளைமோரும் மீட்கப்பட்டதனை அரசாங்கம் மறைத்து விட்டது…

முல்லைத்தீவில் 15 கிலோ கிளைமோரும் மீட்கப்பட்டதனை அரசாங்கம் மறைத்து விட்டது…

by admin


முல்லைத்தீவில் 15 கிலோகிளைமோரும் மீட்கப்பட்டது என்பதை அரசாங்கம் மறைத்துவிட்டது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த உண்மை நிலவரத்தை அரசாங்கம் மறைக்கின்றது எனவும், ஊடகவியலாளர் ஒருவரே ஒட்டிசுட்டான் சம்பவத்தை வெளிப்படுத்தினார் எனவும் கூறிய அவர், இவ்வாறான சம்பவங்களை அம்பலப்படுத்துவதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கிளைமோர்களை தூரத்திலிருந்தும் வெடிக்கவைக்கலாம் என தெரிவித்துள்ள சரத்வீரசேகர முல்லைத்தீவில் அவை மீட்கப்பட்டமை மிகவும் ஆபத்தான நிலை நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளதாகவும்,  தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் உண்மை நிலவரத்தை தெரிவித்தால், இது தொடர்பில் மக்கள் எச்சரிக்ககையுடன் இருப்பதற்கு உதவியாக அமையும் எனவும் சரத்வீரசேகர சுட்டிக் காட்டியுள்ளார். எனினும், ஆபத்தான ஆயுதங்கள் மீட்கப்பட்டதை அரசாங்கம் மறைத்தமை இது முதல் தடவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More