Home இலங்கை யாழில் தொடர்கிறது வாள்வீச்சு – மாணவர்கள் இருவர் வைத்தியசாலையில்…

யாழில் தொடர்கிறது வாள்வீச்சு – மாணவர்கள் இருவர் வைத்தியசாலையில்…

by admin

புலிபிடிக்க அலையும் பாதுகாப்பு தரப்பினர், வாள்வீச்சாளர்களை கண்டுகொள்வதில்லை –
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து தாக்குதல் மேற்கொண்டு உள்ளனர். இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிளில் முக மூடி அணிந்து வந்த இருவர் வீட்டினுள் இருந்த சத்திய தாஸ் (வயது 24) என்பவர் மீதே தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 09 மணியளவில் குப்பிளான் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் மேற்கொண்டு உள்ளனர். அதன் போது வீட்டில் இருந்த பாடசாலை மாணவனான சி. சரூஜன் (வயது 15) என்பவர் மீது வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More