Home இலங்கை மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் TNAயின் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை…

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் TNAயின் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை…

by admin

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றையதினம் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் 3 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள போதும் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் குறித்த 3 மாகாண சபைகளினதும் தேர்தல்கள் இன்று வரை நடைபெறாதுள்ளது.

அதேவேளை, 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் மேலும் 3 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதுடன் தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் இன்னும் முடிவடையாதுள்ளதால் எந்தவொரு மாகாண சபைக்கும் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

இதனால் தேர்தல் சட்ட விதிகளின் திருத்தமானது உடனடியாக செய்து முடிக்கப்படாவிட்டால் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிலையேற்படும்

இதனால் மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளில் சீர்திருத்தத்தை உடனடியாக மேலும் தாமதமின்றி செய்து முடிக்குமாறு நாம் அரசை வலியுறுத்துகின்றோம். எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இச் சீர்திருத்தங்களை செய்யத் தவறும் பட்சத்தில் 2017 ஆம் ஆண்டு மாகாண சபை (திருத்தம்) சட்டம் இல.17 உடனடியாக நீக்கப்படுவதன் மூலம் தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க அரசை நாங்கள் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More