Home இலங்கைகாணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன் போராட்டம்(படங்கள்)

காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன் போராட்டம்(படங்கள்)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். காணாமற் போனோரின் உறவினர்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை நான்கு மணிவரை இடம்பெறவுள்ளது.

வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளை ஞாயிற்றுக் கிழமையுடன் ஐநூறாவது நாளை எட்டவுள்ளதை முன்னிட்டே இன்று யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பஎட்டு வருகிறது. இப் போராட்டத்தின் போது நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் 108 தேங்காய் உடைக்கப்படவுள்ளதுடன் தீச்சட்டிகளும் எடுக்கப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More