Home இந்தியா தமிழக மீனவர்கள் 4பேர் இலங்கை கடற்படையினரால் கைது…

தமிழக மீனவர்கள் 4பேர் இலங்கை கடற்படையினரால் கைது…

by admin

“இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொழிலுக்குப் பயன்படுத்திய படகும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது” என இலங்கைக் கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று  (8) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படுவர் என்றும் இலங்கைக் கடற்படையினர் கூறினர்.

இதே குற்றச்சாட்டில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More