Home இலங்கை புலிகள் பற்றிய பேச்சின்றி வடக்கு அரசியல்வாதிகளால் அரசியல் செய்ய முடியாது…

புலிகள் பற்றிய பேச்சின்றி வடக்கு அரசியல்வாதிகளால் அரசியல் செய்ய முடியாது…

by admin

ஒரேபார்வையில்… யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ஸ

வடக்கு அரசியல்வாதிகளுக்கு விடுதலைப்புலிகள் பற்றி கதைக்காமல் அரசியல் செய்ய முடியாது என  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் தேர்தல் காலத்தில் விடுதலைப்புலிகளின் பாடல்களை பிரச்சார கூட்டங்களில் ஒலிக்கவிடுவது அவர்களை பற்றி பேசுவது . அவர்களின் நினைவு சின்னங்கள் தொடர்பில் பேசுவது என்றே வடக்கு அரசியல்வாதிகளுக்கு  அரசியல் செய்ய தெரியும்.
வடக்கு மக்களுக்கு அபிவிருத்திகளை பெற்று தருகின்றோம். வேலை வாய்ப்புக்களை பெற்று தருகின்றோம். என அவர்களை முன்னேற்றும் விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள். அது தொடர்பில் பேச மாட்டார்கள். வடக்கு மக்களை அபிவிருத்தி அடையாத மக்களாகவே வைத்திருக்க அவர்கள் முயல்கின்றார்கள்.
இங்குள்ள அரசியல் வாதிகளின் பிள்ளைகள் வடக்கில் கல்வி கற்கவில்லை. அவர்களுக்கு வடக்கு பற்றி தெரியுமோ தெரியாது. பலர் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றார்கள்.  இங்குள்ள அரசியல் தலைவர்கள் யாரும் வடக்கு மக்களை முன்னேற்ற வேண்டும் என முயற்சிப்பதில்லை.. தமது குடும்பங்களை மாத்திரம் முன்னேற்றுவதற்கு உழைக்கின்றார்கள்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே காலத்தில் வடக்கின் வசந்தம் எனும் பெயரில் ஒரு பில்லியன் அமெரிக்கன் டொலர்ஸ் செலவு செய்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தோம்.  ஆனால் இன்று வடக்கில் எந்த விதமான அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு உள்ளது ? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு உள்ளது ? எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்க வில்லை. என தெரிவித்தார்.

வடக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குழைவு..

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து உள்ளது என  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தெற்கில் துப்பாக்கி சூடுகள் நடாத்தப்படுகின்றது. வடக்கில் வாள் வெட்டுகள் நடாத்தபடுகின்றது. ஆனால் அதனை கட்டுப்படுத்த காவற்துறையினர் நடவடிக்கைகளை எடுக்க வில்லை. கடந்த சில தினங்களுக்குள் கொழும்பில் ஆறு பேர் சுட்டுப்படுகொலை செய்யபப்ட்டு உள்ளனர். கொலையாளிகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை..

ஆனால் காவற்துறை ஊடக பேச்சாளர் கொலையுண்டவர்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார். அவர்களுக்கு அதனுடன் தொடர்பு இதனுடன் தொடர்பு எத்தனை வழக்கு உள்ளது என கொலையுண்டவர்கள் பற்றியே பேசுகின்றார். கொலையாளிகள் பற்றி வாயே திறக்கின்றார்கள் இல்லை.

அதேபோலவே வடக்கில் வாள் வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த காவற்துறையினர்  நடவடிக்கை எடுக்காது இருக்கின்றார்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வடக்கில் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவென தமிழ் காவற்துறையினரை காவற்துறைச் சேவையில் இணைத்துக்கொண்டார். ஆனால் இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

தெற்கில் பாதாள உலக கோஷ்டிகள் வடக்கில் வாள் வெட்டுக்குழுக்கள் இவற்றை கட்டுப்படுத்த காவற்துறையினர்  எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பன சீர்குழைந்து உள்ளன.

விஜயகலாவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வு..

வடக்குக்கு அரசியல்வாதிகள் தான் போதை பொருட்களை கடத்தினார் எனும் குற்றசாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது , விஜயகலா மகேஸ்வரன், ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடும் போது வடக்குக்கு கடந்த ஆட்சி காலத்தில் அரசியல் வாதிகளின் வாகனத்தில் போதை பொருள் கடத்தப்பட்டகாவும் , மகிந்த ராஜபக்ச பணம் கொடுக்க முற்பட்டதாகவும் கூறப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சி காலத்தில் எந்த அரசியல்வாதிகளும் வாகனத்தில் போதை பொருட்களை கடத்த வில்லை. ஆனாலும் அவரது குற்ற சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். அதேவேளை நாம் அவருக்கு பணம் கொடுக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை. அவருக்கு பணம் வழங்குவதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என தெரிவித்தார்.

மைத்திரி – ரணில் பொய் உரைத்தே ஆட்சி அமைத்தனர்..

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாட்டு மக்களுக்கு பொய் உரைத்தே ஆட்சி அமைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , நாட்டு மக்களுக்கு பல பொய்களை கூறியே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கூட்டு ஆட்சி அமைத்துள்ளனர். பொய் உரைத்து ஆட்சி அமைத்தவர்கள் தற்போது ஏமாற்றி வருகின்றனர்.

அவர்களின் ஏமாற்று பொய்களை மக்கள் தற்போது இனம் கண்டுள்ளனர். அதனால் தான் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் போது அதற்கு மக்கள் பதில் அளித்தனர். மக்கள் தற்போது தெளிவடைந்து உள்ளமையால் , மாகாண சபை தேர்தலை நடாத்தாது பிற்போட முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். ஜனநாயக ஆட்சி முறை எனில் தேர்தல்களை உரிய நேரத்தில் நடாத்த வேண்டும். ஆனால் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு இந்த அரசாங்கம் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More