Home இந்தியா மக்கள் நீதிமன்றம் மூலம் தமிழகத்தில் 77,785 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றம் மூலம் தமிழகத்தில் 77,785 வழக்குகளுக்கு தீர்வு

by admin

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 77 ஆயிரத்து 785 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற உப நீதிமன்றங்களிலும் நேற்று லோக் அதாலத் எனப்டும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

.இதில் மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அ தில், 77 ஆயிரத்து 785 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 கோடியே 66 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் இறந்த தம்பதிக்கு இழப்பீடு கோரி அவர்களது மகள்மார் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு 1 கோடியே 5 லட்சம் மூபா இழப்பீடு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More