Home இலங்கை போதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு மரண தண்டனை – ரணில் தயக்கம்…

போதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு மரண தண்டனை – ரணில் தயக்கம்…

by admin

போதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்கும் சட்­டத்தை அமு­லுக்கு கொண்டு வரு­வதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயக்கம் வெளியிட்டுள்ளார்.

மரண தண்டனைச் சட்டம் அமு­லுக்கு வந்தால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலு­கைக்கு பாதிப்பு ஏற்­படும் என்பதால்  இது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் பின்­னரே இறுதி முடி­வுக்கு வர வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் நேற்று தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் கூடி­யது. இந்த கூட்­டத்தில் ஐக்­கிய தேசியக் முன்­ன­ணியின் பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­களும் கலந்து கொண்­டனர். இந்த கூட்­டத்தின் போது இவ்­வா­ரத்­திற்­கான பாரா­ளு­மன்ற அலு­வல்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளன.

 குறிப்­பாக நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையின் செய்தி குறித்து ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் கொண்டு வர­வுள்ள சபை ஒத்­தி­வைப்பு வேளை மீதான விவா­தத்­திற்கு தயா­ரா­கு­வது,  சிங்­கப்பூர் உடன்­ப­டிக்கை ஒப்­பந்த தொடர்­பாக விவா­தத்­திற்கு தயா­ரா­கு­வது உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

 இதன்­போது ஐக்­கிய தேசி­ய ­கட்­சியின் தொழிற்சங்க செய­லா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான அஜித் பீ பெரேரா எழுந்து நாட்டில் மரண தண்­ட­னையை அமுலுக்கு  கொண்டு வரு­வது தொடர்பில் பிர­த­மரின் நிலைப்­பாட்டை வின­விய போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவினால்   இந்த தயக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More