Home இலங்கை யாழில்.திடீரென மயங்கி விழுந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழில்.திடீரென மயங்கி விழுந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

கொக்குவில், பலாலி, சங்கானை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். கொக்குவில் கிழக்கை சேர்ந்த 60 வயதுடைய கார்த்திகேசு கதிர்காமத்தம்பி  என்பவர் வீட்டில் பாக்கு இடித்துக்கொண்டு இருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உறவினர்கள் அவரை உடனே யாழ்.போதனா வைத்திய சாலைக்கு எடுத்து சென்றனர். இருந்த போதிலும் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

பலாலியை சேர்ந்த 30 வயதுடைய  குணசீலன் குயின்சன் எனும் இளைஞன் வீட்டில் நேற்றுக்காலை பிட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்த வேளை திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக உறவினர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பெரிய தம்பம் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய  இராமன் இராசதுரை என்பவர் சங்கானை பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் சங்கானை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மன்னாரை சேர்ந்த இவர் சங்கானையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். சங்கானை தொட்டிலடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி நின்று விட்டு மீண்டும் மன்னார் செல்வதற்காக பேருந்துக்காக தொட்டிலடி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அதன் போது திடீரென மயக்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சங்கானை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More