Home உலகம் கொரிய போரை முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கையை விரைவில் செயற்படுத்துமாறு வடகொரியா வலியுறுத்தல்

கொரிய போரை முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கையை விரைவில் செயற்படுத்துமாறு வடகொரியா வலியுறுத்தல்

by admin


65 ஆண்டு கால கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான உடன்படிக்கையை விரைவில் செயல்படுத்தும்படி தென்கொரியாவை வடகொரிய அரசு வலியுறுத்தி உள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இணக்கமாக வடகொரிய ஜனாதிபதி முன்வந்ததையடுத்து கடந்த ஏப்ரல் மாதம இரு நாட்டு தலைவர்களிடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, 65 ஆண்டுகளாக நீடித்து வந்த கொரிய போரை முடிவுக்கு கொண்டு வரவும், கொரிய தீபகற்பத்தினை அணு ஆயுதமற்ற பிரதேசம் ஆக்கவும் உறுதி பூண்டனர். இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என தென் கொரியா அரசாங்கத்திடம் வடகொரியா வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வடகொரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கூடிய கடமை தென் கொரியாவுக்கு உள்ளதாகவும், இனியும் தாமதிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More