Home பிரதான செய்திகள் ஜெர்மனி கால்பந்து வீரரான மெசுட் ஒசில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

ஜெர்மனி கால்பந்து வீரரான மெசுட் ஒசில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

by admin


ஜெர்மனி கால்பந்து வீரரான மெசுட் ஒசில் (  mesut ozil ) சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த கால்பந்து கிண்ண தொடரில் ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியிருந்தது.   இதனைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களின் போது 29 வயதான மெசுட் ஒசில் மீது கடும் வார்த்தை தாக்குதல் நடத்தப்பட்டது. மெசுல் ஒசிலின் பூர்விகம் துருக்கியாகும். அவரது படத்தை வெளியிட்டு, ஜெர்மனிக்கு விசுவாசமாக ஒசில் விளையாடினாரா   என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் தன்மீது இனவெறி தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும், அவமதிப்பு செய்ததாகவும் உணர்வதாகவும் அதனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவித்துள்ளார். அர்செனல் அணிக்காக விளையாடும் மெசுட் ஒசில் 2009-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வரை 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More