Home இலங்கை யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது…

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


யாழ் போதனா வைத்தியசாலையில் அடுத்த மாதம் முதல் அவசர சிகிச்சைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்  போது சுகாதாரம் குறித்த விடயம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது கருத்து தெரிவிக்கையிலையே சத்தியமூர்த்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு அடுத்த மாதம் 17 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதற்கு மேலாக புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற கட்டிடத்துடன் அதனை நான்குமாடியாக அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடக்கப்பட்டுள்ளது. இதற்காக 200 மில்லியன் ருபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரியாலைப் பகுதியில் தனியார் ஒருவர் வைத்தியசாலைக்காக இரண்டு ஏக்கர் காணியை அன்பளிப்புச் செய்துள்ளார். அந்தக் காணியில் கண் வைத்தியசாலையை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More