Home இலங்கை அடிப்படை உரிமையை மறுத்து தேர்தலை பிற்போடுவது ஜனநாயகமா?

அடிப்படை உரிமையை மறுத்து தேர்தலை பிற்போடுவது ஜனநாயகமா?

by admin

மக்களின் அடிப்படை உரிமையான சுயாதீனமாக இடம் பெறும் தேர்தலை பிற்போடுவதா தேசிய அரசாங்கத்தின் ஜனநாயகம் எனக் கேள்வி எழுப்பியுள்ள லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண , மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கத்தில் இணக்கப்பாடற்ற தன்மைகளே காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்களுக்காகவே தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது எனவும் புதிய தேர்தல் முறையில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அரசாங்கம் சில வரையறைகளுக்குள் உட்பட்டே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அரசாங்கத்துக்கு எதிரான பலன்களே கிடைத்தமையினால் அதே பெலாபலன்களே மாகாண சபையிலும் தொடருமோ என்ற அச்சம் காரணமாகவே அரசாங்கம் தொடர்ந்து தேர்தலை பிற்போட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரியில் தேர்தலை நடத்துவது என்பது நம்பமுடியாத விடயம் எனத் தெரிவித்த அதற்கான எவ்வித முன்னேற்றகரமான விடயங்களும் தென்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் ஜனநாயகத்தை அழித்ததாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்ற தேசிய அரசாங்கம் காலத்திற்கு காலம் இடம் பெற வேண்டிய தேர்தலை நடத்தாமல் சுய நல அரசியல் இருப்பு கருதி கருதி பிற்போட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More