Home இலங்கையாழ் அரியாலை நெடுங்குளம் புகையிரதக் கடவையில், 3 இளைஞர்கள் பலி…..

யாழ் அரியாலை நெடுங்குளம் புகையிரதக் கடவையில், 3 இளைஞர்கள் பலி…..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

அரியாலை புகையிரத விபத்தில் படுகாயமடைந்த சீ.சஞ்சீவன் எனும் இளைஞனும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை நெடுங்குளம் புகையிரத கடவையில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்து உள்ளதுடன் ஒருவர் கவலைக்கு இடமான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சந்திரகுமார்  மற்றும் அதே பகுதியை சேர்ந்த கிருஷானந் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட தொடர்ந்துடன் இன்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று இளைஞர்கள் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

குறித்த புகையிரத கடவையில் பாதுகாப்பு கடவைகள் இல்லாத போதிலும் சமிஞ்சை விளக்குகள் புகையிரதம் வருவதற்கான சமிஞ்சை ஒலியை ஒலித்துக்கொண்டு இருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாது குறித்த இளைஞர்கள் கடவையை கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டது என காவற்துறையின்  ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More