Home இலங்கை உயர்தரப் பரீட்சை – மேலதிக வகுப்புக்கள் ,கருத்தரங்குகளுக்கு நாளைமுதல் தடை :

உயர்தரப் பரீட்சை – மேலதிக வகுப்புக்கள் ,கருத்தரங்குகளுக்கு நாளைமுதல் தடை :

by admin

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2018ஐ முன்னிட்டு கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் என்பனவற்றை நடத்துவதற்கு நாளை, 31 ஆ ம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு முதல் செப்ரெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். அத்துடன் தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தனி நபரே அல்லது நிறுவனமே இந்த தடை உத்தரவை கருத்திற்கொள்ளாது நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் என்றும் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More