Home சினிமாஉண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள் – இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா கூறியது

உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள் – இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா கூறியது

by admin



உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் என்று இளைய இசையமைப்பாளர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.  இளையராஜாவின் மகனும் இளைய இசையமைப்பாளருமான யுவன் இசையமைத்து தயாரித்திருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ இசை வெளியீட்டில் கலந்துக் கொண்டபோதே இளையராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.

கே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் வை எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. என்ற இயக்குனர் இளன் இயக்கிய இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.
அதன்பின் இளையராஜா பேசும்போது, ‘பியார் பிரேமா காதலுக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன். இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்’ என்றார்.

சந்தோஷ் நாராயணன் பேசும்போது, ‘நான் பள்ளியில் படிக்கும்போது துள்ளுவதோ இளமை இசையை கேட்டு யுவன் ரசிகன் ஆனேன். இன்று வரை எப்படி இளைஞர்கள் நாடித்துடிப்பை அறிந்து யுவன் பாடல்களை கொடுக்கிறாரோ தெரியவில்லை’ என்றார்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசும்போது, ‘நான் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாடி பரிசு பெற்றது எல்லாமே யுவன் ஷங்கர் ராஜா சார் பாடல்கள் தான். தூரத்தில் இருந்து பார்த்த யுவன் சாரை இங்கு பக்கத்தில் நின்று பார்ப்பதில் மகிழ்ச்சி’ என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More