Home இந்தியா பீகாரில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி பேரணி

பீகாரில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி பேரணி

by admin

பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து டெல்லியில் இன்றிரவு நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணியில் ராகுல் காந்தி , தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  பீகார் – முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுமியர் காப்பகத்தில் உள்ள சுமார் 40 சிறுமியரை காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகவும் ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் முறைப்பாடுகள் எழுந்துள்ள நிலையில் மருத்துவ பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐ. ஏற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து பலர் கைதாகி வருகின்றனர்.இந்நிலையில், இந்த சம்பவத்தினை கண்டித்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பீகார் அரசிடம் நீதி கேட்டும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி சார்பில் இன்றிரவு டெல்லியில் மெழுகுவர்த்தி பேரணி நடைபெற்றது. பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.