Home இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த இளம் கலைச் செயற்பாட்டாளர் கொழும்பில் மரணம்…

மட்டக்களப்பை சேர்ந்த இளம் கலைச் செயற்பாட்டாளர் கொழும்பில் மரணம்…

by admin


மட்டக்களப்பை சேர்ந்த இளம் கலைச் செயற்பாட்டாளர் மாணிக்கவாசகம் விஜயரூபன் கொழும்பில் உள்ள தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

34 வயதுடைய  மாணிக்கவாசகம் விஜயரூபன் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியை சேர்ந்தவர். இவர் ஊடகத்துறையுடன் பிற கலைச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். கொழும்பிலுள்ள அரசாங்க திணைக்களம் ஒன்றில் பணியாற்றி வந் இவர், த தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பகுதிநேர அறிவிப்பாளராகவும் கடமையாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தனது பணிக்காக அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டிருந்ததபோது இவர் திடீர் சுகவீனத்திற்கு உள்ளாகியமை காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More