Home உலகம் இத்தாலியில் நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம் – பலர்பலி….

இத்தாலியில் நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம் – பலர்பலி….

by admin

இத்தாலியின் ஜெனோவா நகரில் விரைவு நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பாலத்தின் அடியில் சிக்கி ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இத்தாலியின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையில் கொன்கிரீட் தூண்களை அமைத்து அவற்றின் மீது உருவாக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாகவே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இடையில் சில வாய்க்கால் மற்றும் கால்வாய் பாலங்களும் உள்ளன.இந்நிலையில், ஜெனோவா நகரின் மேற்கில் பிரபல தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள A10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்னும் மேம்பாலத்தின் ஒருபகுதி இன்று திடீரென்று இடிந்து விழுந்தது.

அந்த பாலத்தின் சுமார் 200 மீட்டர் நீளத்திலான பகுதி சுமார் 100 அடி ஆழத்தில் நொறுங்கி விழுந்ததால் அப்போது அவ்வழியாக சென்ற பல வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணியில் மீட்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விபத்தில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 22 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More