Home உலகம் அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு

அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு

by admin

அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து உள்ளார். முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு இது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.  இந்தியாவுடன் ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு மற்றொரு பக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை முன்னைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசு ஊக்குவிப்பதாக தெரிவித்து அந்நாட்டுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக்கொண்டிருந்தது

இந்த நிலையில் அங்கு தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் புதிய பிரதமர் இம்ரான்கான், இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றையதினம் பதிவிட்ட ருவிட்டர் பதிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் உள்ளிட்ட மோதல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், வறுமையை ஒழித்துக்கட்டி விட்டு, துணைக்கண்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றம் அடையச்செய்வதற்கு நமது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு, வர்த்தகத்தை தொடங்குவதுதான் சிறந்த வழி எனவும் இம்ரான்கான், தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More