Home இந்தியா பெண் ஒருவரை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்றமை – மனித உரிமைகள் ஆணையகம் விளக்கம் கோரியுள்ளது

பெண் ஒருவரை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்றமை – மனித உரிமைகள் ஆணையகம் விளக்கம் கோரியுள்ளது

by admin


பீகாரில் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு அம்மாநில அரசிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையகம் கோரிக்கை விடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் 20 வயதான பிம்லேஸ் ஷா என்பவர் கடந்த 19-ம் திகதி திடீரென காணாமல் போயிருந்தநிலையில் மறுநாள் அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பிம்லேஸ் ஷாவை அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெண்தான் கொலை செய்திருப்பார் என சந்தேகப்பட்ட கிராமமக்கள் , அந்த பகுதியில் இருந்த கடைகளுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் சந்தேகப்பட்ட பெண்ணை அடித்து தாக்கியதுடன் அவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பலரும் தமது கண்டனங்களை பதிவு செய்துள்ள நிலையில் இது குறித்து 4 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையகம் பீகார் அரசுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. . மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் அம்மாநில காவல்துறைக்கும் ஆணையகம் அறிவுறுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.