Home இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமே திறைசேரிக்கு அதிக வரியை செலுத்துகின்றது :

பெற்றோலிய கூட்டுத்தாபனமே திறைசேரிக்கு அதிக வரியை செலுத்துகின்றது :

by admin

எமது நாட்டில் பெற்றோலிய கூட்டுத்தாபனமே திறைசேரிக்கு அதிக வரியை செலுத்தும் நிறுவனமாகும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் ஆகிய நிறுவனங்களில் 25 ஆண்டுகள் திருப்த்திகரமான சேவையை பூர்த்தி செய்த ஊழியர்களை கௌரவப்படுத்தும் முகமாக அவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘திறைசேரிக்கு 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையானது ரூபா.148 பில்லியன் ஆகும், 2017 ஆம் ஆண்டு ரூபா.148 பில்லியன் ஆகும். ஆறுமாத காலத்திற்குள் 2018ஆம் ஆண்டு முதல் ஆறுமாதத்திற்குள் ரூபா.68 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பது வெறும் பெற்றோலை நிரப்பும் நிலையம் அல்ல. அங்கு கடமையாபற்றும் ஊழியர்களின் கடின உழைப்பு காரணமாகவே நாங்கள் அதிக வரியை திறைசேரிக்கு கொடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாகவும் மக்களுக்கு அதிக சேவைசெய்யும் நிறுவனமாகவும் மாற்றமடையும் எனவும் நான் இருக்கும் வரைக்கும் இந்த நிறுவனத்தை பாதுகாப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More