Home இலங்கை பிரபாகரனின் சீருடையை அகற்றி அரைத்துணியை போட பொன்சேகாதான் உத்தரவிட்டார்!

பிரபாகரனின் சீருடையை அகற்றி அரைத்துணியை போட பொன்சேகாதான் உத்தரவிட்டார்!

by admin

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நந்திக்கடற் கரையில் கொல்லப்பட்டு கிடந்தபோது அவரது சடத்திலிருந்து, விடுதலைப் புலிகளின் சீருடையை அகற்றி, அரைத்துணியை அணிவிக்குமாறு முன்னாள் இராணுவத் தளபதியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டதாக மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா இராணுவ அணிகளை வழிநடத்திய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுள்ள நிலையில் தனது அனுபவங்கள் குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தகவல்களை பரிமாறியுள்ளார். இதன்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2009 மே 19ஆம் நாள், கடுமையான துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர், பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், பிரபாகரனின் உடல் புலிகளின் சீருடையில் இருக்கும் முதலாவது ஒளிப்படம் பகிரங்கப்படுத்தப்பட்டதாகவும் கூறிய அவர் அதற்கு சரத் பொன்சேகா மூத்த இராணுவ அதிகாரிகளை கடுமையாகத் திட்டி, பிரபாகரனின் சீருடையை அகற்ற உத்தரவிட்டதாகவும் கூறினார்.

சரத் பொன்சேகா கோபமாக இருந்தாகவும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலில், அரைத் துணியைப் போடுமாறு உத்தரவிட்டதாகவும் கூறிய அவர், பின்னர், இராணுவ முகாம் ஒன்றுக்கு பிரபாகரனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, இடுப்பில் அரைத்துணி அணியப்பட்டு, மீண்டும் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கே கொண்டு வரப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரபாகரனின் உடலை கருணாவும், தயா மாஸ்டரும் அடையாளம் காட்டிய போது, இடுப்பில் மாத்திரம் துணி போர்த்தப்பட்டிருந்ததாகவும் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே மேலும் தெரிவித்துள்ளதாக   குறிப்பிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More