Home இலங்கை தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தல் – நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்க மறியலில்…

தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தல் – நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்க மறியலில்…

by admin


நேவி சம்பத் என அழைக்கப்படும், முன்னாள் லெப்டினென் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, எதிர்வரும் செப்டம்பர் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நிதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டார். இதனையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More