Home இலங்கை யார் கட்டினால் என்ன – வீடு கட்டப்பட வேண்டும் :

யார் கட்டினால் என்ன – வீடு கட்டப்பட வேண்டும் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை இந்தியா கட்டினால் என்ன சீனா கட்டினால் என்ன யப்பான் வந்து கட்டினால என்ன. எங்களுக்குத் தேவை வீடு கட்டப்படல் வேண்டும் என்பதே என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்

ன்று 29-08-2018 கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட அவர் கிளிநொச்சி மாவடட்ச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வீட்டுத்திட்டம் தொடர்பில் அமைச்சர் மனோகணேசனுக்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை இது தொடர்பில் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும். அது பிரதமரின் வீட்டத்திட்டம். எனக்குத் தரப்பட்ட வீட்டுத்திட்டத்தை நான் உரியமுறையில் செய்து வருகிறேன் எனத்தெரிவித்த அவர் மூன்று வருடங்களாக யார் வீடுகளை கட்டுவது என்பது தொடர்பில் கதைத்து கதைத்து ஒரு முடிவும் எட்டப்படாது இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான். எனவும் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More