Home இந்தியா மத்திய அரசின் நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி :

மத்திய அரசின் நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி :

by admin

அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க தனிநீதிமன்றங்கள் அமைப்பதில் மத்திய அரசு இன்னும் முழுஅளவில் தயாராகவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சட்டத்தரணி அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க பல்வேறு மாநிலங்களில் 12 தனிநீதிமன்றங்களை அமைக்கவேண்டும் எனவும், அவை கடந்த மார்ச் முதலாம் முதல் செயல்பாட்டுக்கு வரவேண்டும் எனவும் கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் டெல்லியில் 2 தனிநீதிமன்றங்களும் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தலா ஒரு தனிநீதிமன்றங்களும் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில் அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க தனிநீதிமன்றங்களை அமைப்பதில் மத்திய அரசு இன்னும் முழுஅளவில் தயாராகவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பிக்கும் கட்டாய சூழ்நிலையை அரசு ஏற்படுத்துவதாகவும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தாங்கள் அதை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More