Home இலங்கை கடவுச்சீ்டடு மோசடி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு….

கடவுச்சீ்டடு மோசடி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு….

by admin


போலி தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் முன்னாள் உதவி கட்டுப்பாட்டாளர் நிஷாந்த அநுருத்தவிடம், சாட்சிக்குரிய விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் போலி தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்டதாக குற்றம் சுமத்தி சசி வீரவன்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More