Home இலங்கை இன ரீதியான பாடசாலைகளை ஒழித்தால் இன முரண்பாடு ஒழியும் என்று உறுதிப்படுத்த முடியாது :

இன ரீதியான பாடசாலைகளை ஒழித்தால் இன முரண்பாடு ஒழியும் என்று உறுதிப்படுத்த முடியாது :

by admin

இன ரீதியான பாடசாலைகள் இருக்கவேண்டுமா, இல்லையா என்ற பிரச்சினைகள் இப்போது ஆரம்பித்துள்ளன. ஆனால், ஒரு பாடசாலையில் இன ரீதியான தனித்துவ அடையாளம் இருந்தாலும், அதில் ஏனைய இன மாணவர்களும் கற்கக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் காலத்தின் தேவையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பு பதியுதீன் மஹ்மூத் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முகப்பை இன்று (05) புதன்கிழமை திறந்துவைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

இன முரண்பாடுகளை இல்லாதொழிக்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை வியாழக்கிழமை (05) தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவுள்ளார். இன ரீதியான பாடசாலைகளை இல்லாதொழித்தால், இன முரண்பாடுகள் குறையும் என்று பேசப்படுகிறது. ஆனால், இதை ஆராய்ந்துதான் செய்யவேண்டும்.

இன ரீதியான பாடசாலைகளை இல்லாமல் செய்வதன்மூலம், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒழிந்துவிடும் அல்லது இல்லாமல்போய்விடும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கு நேரடி செல்வாக்கு செலுத்தக்கூடிய வேறு காரணங்களும் இருக்கலாம்.

ஒரு பாடசாலைகளுக்கு இனரீதியான தனித்துவ அடையாளம் இருந்தாலும், அங்கு ஏனைய இன மாணவர்களும் கல்வி கற்கக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும். அவ்வாறு செய்வதன்மூலம்தான் இனங்களுக்கிடையில் பரஸ்பரம், புரிந்துணர்வை வளர்க்கமுடியும் என்றார்.

பாடசாலை அதிபர் சித்தீக்கா {ஹஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அனஸ், மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் ரியாஸ் கபூர், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran September 5, 2018 - 4:33 pm

தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் மற்றும் சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்டவர்களின் வாழ்க்கை முறையின் முக்கிய கூறுகளாகிய அடையாளச் சின்னம் (குறியீடு), மொழி (இலக்கணம், இலக்கியம், இசை, நாடகம்) விழுமியங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகள், வழக்கம், பழக்கம், நல்லொழுக்கம், விதி, சட்டம் , எதிர்பார்ப்பு, அறிவு, திறன், பங்கு மற்றும் ஆக்கப் பொருட்கள் (ஓவியம், சிற்பம்) என்பவற்றின் வித்தியாசங்கள் மற்றும் ஒற்றுமைகளை தெரிந்து, அங்கீகரித்து மற்றும் சம உரிமையுடன் தமது வாழ்க்கை முறையை பாதுகாக்கக் கூடிய சூழலை உருவாக்கி, பல்லின பாடசாலைகளை நிறுவி, இனங்களின் உண்மை வரலாற்றை பாடசாலைகளில் படிப்பித்தால், இன முரண்பாடுகளை இல்லாதொழித்து அல்லது குறைத்து இனங்களுக்கிடையில் பரஸ்பரம், புரிந்துணர்வை வளர்க்கமுடியும். இதற்கு அரசாங்கம் பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய வேண்டும்

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More