Home இலங்கை ஊழல், மோசடிகளுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது :

ஊழல், மோசடிகளுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது :

by admin

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரான 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக மேற்கொள்ள முடியாது போன பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டு, ஊழல், மோசடிகளற்ற தூய்மையான ஆட்சியொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு நல்லாட்சி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (05) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவை சுயாதீன ஆணைக்குழுவாக பலப்படுத்துதல் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழுவை அமைக்கக் கிடைத்தமை இதன் முக்கிய வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.

40, 50 வருட காலமாக பேச்சளவில் மட்டுமே இருந்துவரும் கணக்காய்வு சேவையை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ஊழல், வீண்விரயம் மற்றும் திருட்டுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் இருந்துவரும் காலதாமதம் தொடர்பாக நாட்டு மக்களின் கவலை குறித்து நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக தான் நியமித்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்தி தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதன்போது மக்களின் சொத்துக்களையும் அரச நிதியையும் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்தில் மரண தண்டனையையும் உட்படுத்த வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க, அரச கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More