Home இலங்கை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து, பதிலாக புதிய சட்டம்….

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து, பதிலாக புதிய சட்டம்….

by admin


இலங்கையில் தற்போது நடைமுறையிலுள் பயங்கரவாத தடுப்புச்  சட்டத்தை இரத்துச் செய்து, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான சட்டமூலமொன்றை, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்று (11.09.18) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பித்ததோடு, அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இந்தப் புதிய சட்டமூலத்தில், அத்தியாவசியமான காரணிகள் சில உள்ளடங்கவில்லை என்று, அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஸ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரால், அமைச்சரவைக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More