Home இலங்கை கிளிநொச்சியில் யுத்தப் பாதிப்புகளுக்குள்ளானவர்களுக்கு நட்டஈடு வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் யுத்தப் பாதிப்புகளுக்குள்ளானவர்களுக்கு நட்டஈடு வழங்கி வைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நட்டஈடுகள் இன்று கிளிநொ்சியில் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநாச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நாட்டில் நிலவிய யுத்தத்தினால் சேதமாக்கட்டப்பட்ட ஆலயங்கள் மற்றும் உறவுகளை இழந்தோர், அங்கங்களை இழந்தோர் மற்றும் சொத்துக்களை இழந்தோருக்கான நட்டஈட்டு காசோலைகள் ஒரு தொகுதியினருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநாச்சிய மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 252 பேருக்கு 214, 65,990 மொத்தமாக பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், புனர்வாழ்வு அதிகார சபை தலைவர் அன்னலிங்கம், அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More