Home இலங்கை ஆசிய கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்

ஆசிய கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்

by admin


ஆசிய வலைப்பந்து கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர். போட்டிகளில் திறமையாக விளையாடி தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கனைகளின் திறமையை பாராட்டிய ஜனாதிபதி அவர்களது எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகள் வெற்றிபெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அதற்காக அரசாங்கம் சகல அனுசரணைகளையும் வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களும் விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இலங்கை வலைப்பந்தாட்ட அணியுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதேநேரம் 2018 உலக கரம் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை ஆண்கள் அணியும் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட இலங்கை மகளிர் அணியும் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More