Home இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த இல்லையேல், நான், கோத்தபாய, பசில் எவரேனும் ஒருவர் போட்டியிடுவோம் :

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த இல்லையேல், நான், கோத்தபாய, பசில் எவரேனும் ஒருவர் போட்டியிடுவோம் :

by admin


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் ஒருவர் போட்டியிடுவார் என்று மகிந்த ராஜபக்ச இந்தியாவில் கூறிய நிலையிலேயே சமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திற்கு சென்ற சமல் ராஜபக்ச ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவே போட்டியிட வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாக குறிப்பிட்டனர். அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் சகோதரர்களில் ஒருவர் போட்டியிடுவோம் என அவர் ; தெரிவித்தார்.

அவரது சகோதரர்களின் வரிசையில் தானும் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இருப்பதாகவும் எனினும் தேர்தலில் யாரை களமிறக்குவது என்பது தொடர்பில் மகிந்த ராஜபக்சவே தீர்மானம் எடுப்பார் எனவும் சமல் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More