Home உலகம் பிலிப்பைன்சில் பலத்த மழை, நிலச்சரிவு – 4 பேர் பலி…

பிலிப்பைன்சில் பலத்த மழை, நிலச்சரிவு – 4 பேர் பலி…

by admin


பிலிப்பைன்ஸில் செபு தீவில் பெய்த பலத்த மழையினால் நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 4 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிலிப்பைன்ஸ் நாட்டில், இந்த ஆண்டின் மிக வலுவான புயல் என்று சொல்லப்படக்கூடிய ‘மங்குட்’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலத்த பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது. அதன் பாதிப்பில் இருந்து பிலிப்பைன்ஸ் இன்னும் மீளவில்லை.

இந்த நிலையில் அங்குள்ள செபு தீவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி அந்தப் பிராந்திய காவற்துறை அதிகாரி டிபோல்டு சினாஸ், நிருபர்களிடம் பேசும்போது, “நிலச்சரிவு காரணமாக, சுண்ணாம்பு குவாரி பகுதியில் அமைந்திருந்த 20 முதல் 24 வீடுகள் வரை மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டன. வீடுகளில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

நாகா நகரத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களின் அழுகையும், ஓலமும் தங்களுக்கு கேட்டதாக மீட்பு படையினர் கூறினர்.
நாகா நகர உறுப்பினர் கார்மேலிங் குரூஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நிலச்சரிவில் 50 முதல் 80 பேர் வரை சிக்கி இருக்கக்கூடும் என கருதுவதாகவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்..

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More