Home இலங்கை கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு

கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு

by admin

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பியபோது காணாமல் போயிருந்த அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரைப்பகுதியில் காணப்பட்டதனையடுத்து தேடதல் மேற்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நடராசா போதநாயகி எனப்படும் கர்ப்பிணி பெண் விரிவுரையாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது உயிரிழப்புக்கான காரணமம் தெரியாத நிலையில் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று மதியம் உயிரிழந்த பெண் தனது கணவனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பெடுத்து திருகோணமலைக்கு வருமாறு தெரிவித்ததாக அவரது கணவன் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More