Home உலகம் கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்..

கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்..

by admin

கணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். .

கடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதனை அடுத்து கைது செய்யப்பட்ட, பாக்கியம் ராமதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இதேவேளை கொல்லப்பட்ட கனகசபை ராமதனின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட சட்ட ரீதியான நடைமுறைகள் தொடர்வதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More