Home இந்தியாடெல்லியில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் உட்பட 7 பேர்

டெல்லியில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் உட்பட 7 பேர்

by admin


இந்திய தலைநகர் டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள சவன் பார்க் என்ற இடத்தில் 5 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் இடம்பெற்ற இந்த விபத்தின் போது பலர் இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில் உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பலரை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெண் ஒருவரும் 4 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்த மீட்புப்பணியினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடம் 20 ஆண்டுகள் பழமையானது எனவும் கட்டிடம் பலவீனமாக இருந்தது எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More