Home இலங்கைமன்னாரில் 141 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு – தொடரும் அகழ்வு பணிகள்

மன்னாரில் 141 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு – தொடரும் அகழ்வு பணிகள்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 21 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(1) 77 ஆவது தடவையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. தற்போது வரை 141 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் 135 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு செய்யப்பட்டுள்ளது. -தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையினால் அகழ்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More