Home இலங்கை சிறப்பாக இடம்பெற்ற கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முத்தமிழ் விழா

சிறப்பாக இடம்பெற்ற கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முத்தமிழ் விழா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முத்தமிழ் விழா கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று கோலாகலமாக இடம்பெற்றது. தமிழர் கலை,கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கம் நோக்குடன் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிலையில் கிளிநாச்சி மகாவித்தியாலய மாணவர்கள் ஐநூறுக்கு மேற்பட்டவர்களின் நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்திருந்தன. காலை 9 மணியளவில் மங்கல வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநாச்சி மகாவித்தியாலய மாணவ மாணவியரின் மயிலாட்டம், கோலாட்டம், செம்பு நடனம், காவடியாட்டம், கும்மி, குறத்தி நடனம், விவசாயிகளின் பெருமை கூறும் நடனம், மீனவர் பாடல்கள், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
பாரம்பரிய கலை, கலாச்சார விழுமியங்களை மாணவர் மத்தியில் வேரூன்ற செய்யும் வகையில் அத்தனை கலை படைப்புக்களும் திறம்பட வெளிக்கொணரப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

   

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More