Home இந்தியா கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 6 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 6 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

by admin

 
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளதனால் அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் எனவும் அதன்பின்னர் மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அத்துடன் தமிழகத்தில் வரும் 7-ம் திகதி அதீத கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More