Home இலங்கை இலங்கையில் விபத்துக்களால் நாளாந்தம் 7 முதல் 8 பேர் வரை பலி – வருடத்துக்கு 3000 மில்லியன் இழப்பு…

இலங்கையில் விபத்துக்களால் நாளாந்தம் 7 முதல் 8 பேர் வரை பலி – வருடத்துக்கு 3000 மில்லியன் இழப்பு…

by admin


இலங்கையில் நாளாந்தம் வாகன விபத்துக்களால் 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்பதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பாதுகாபபு பிரதிக் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் பதிவாகும் 100 முதல் 105 வரையிலான விபத்துக்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாவதாகவும் மேலும் 20 பேர் வரையில் நாளாந்தம் விபத்துக்களால் காயமடைவதாகவும் அவர் மேலும் குறிபிட்டுள்ளார்.

அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சில் நேற்று அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தலமையில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொன்டு உரையாற்றிய அவர், நாட்டில் நாளாந்தம் 100 முதல் 105 வாகன விபத்துச் சம்பவங்கள் பதிவாகின்றன. அதில் ஒரு நாளைக்கு சராசரியாக 7 முதல் 8 பேர் உயிரிழக்கின்றனர். 20 பேர் வரையில் காயமடைகின்றனர். அப்படி பார்க்கும் போது வருடத்துக்கு வாகன விபத்துக்களால் சுமார் 3000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

ஒரு உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பிலான முழுமையான விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒரு மில்லியன் ரூபாவை செலவழிக்கின்றது. அப்படியானால் வருடத்துக்கு 3000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி விபத்துக்களின் பின்னரான நடவடிக்கைகளுக்காக செலவிடபப்டுகின்றது. விசாரணையாளர்கள், நீதிமன்ற விசரணை, அரச இரசாயன பகுப்பாய்வு என இதில் செலவுகள் உள்ளடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இவ்விபத்துக்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும்,தண்டப்பணம் அறவிடும் முறைமையை இலத்திரணியல் முறையில் செயற்படுத்தவும் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த பிரதிக் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன கடனட்டைகள், தொலைபேசிகள் ஊடாக தண்டப்பணம் அறவிடும் வகையில் இந் நடவடிக்கையினை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More